Advertisement

சிறப்புச்செய்திகள்

தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெய் பீம் படம் - வன்மத்தை வளர்க்காதீர்: கவுதமன்

06 நவ, 2021 - 11:29 IST
எழுத்தின் அளவு:
Director-V-Gauthaman-slams-Jai-Bhim-movie

சென்னை : ‛வன்மத்தை திட்டமிட்டு வளர்க்காதீர்கள்' என இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார். சூர்யா நடித்து ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படம் சமீபத்தில் ஆன்லைனில் வெளியானது. இருளர் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கினர். படத்தில் மிகைப்படுத்தப்பட்ட உண்மையோடு, சில விஷயங்களில் வேண்டுமேன்ற சில இனத்தினர் மீது வன்மம் புகுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து இயக்குனரும், நடிகருமான வ.கவுதமன் அறிக்கை: உண்மை சம்பவத்தை எடுக்கிறோம் என்று பிரகடனப்படுத்திவிட்டு படைப்பின் பரபரப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும் தமிழ் சமூகத்தின் ஒரு குடியின் அடையாளமான அக்னி குண்டத்தை திட்டமிட்டு நேர்மையற்ற ஒரு கொடூரனின் வீட்டு அடையாளமாக காட்சிப்படுத்தியதிற்காக படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் ஞானவேலுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு படைப்பாளனாக நானும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‛ஆட்டோ சங்கர், சந்தனக்காடு' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளேன். ஒரு படைப்பு என்பது எப்போதும் தன் சமூகத்தை பண்படுத்த வேண்டுமே தவிர, ஒருபோதும் புண்படுத்தி விடக்கூடாது. ஒரு கலவரத்தை படைப்பாக்கலாம். ஆனால் ஒரு படைப்பு ஒருபோதும் கலவரத்தை உருவாக்கி விடக்கூடாது.

அந்தோணிசாமி என்கிற மிருகம் செய்தது ஒரு மன்னிக்க முடியாத குற்றம். அவன் தவறு செய்தான் என்பதற்காக அவன் சார்ந்த சமூகத்தையோ, மதத்தையோ கூட குற்றம் சுமத்துவது நேர்மையாகாது. ஆனால் நீங்கள் அதனையும் தாண்டி அந்தோணிசாமி என்கிற பெயருக்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டு குருவையும், அக்னிகுண்டத்தையும் திட்டமிட்டு அவமானப்படுத்தியது, அந்தோணிசாமி செய்த தவறையும் தாண்டி நீங்கள் செய்த மாபெரும் தவறு. தவறுதலாக நாட்காட்டி இடம் பெற்றுவிட்டது என படக்குழு சொன்னதாக ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது.

சிரத்தை எடுத்து அக்கினி குண்டத்தோடு 1995ல் என பதிவு செய்து சுவரில் மாட்டப்பட்ட நாட்காட்டி தவறுதலாக வந்துவிட்டது என்று இதற்கு மேலும் உங்களால் எப்படி பொய் சொல்ல முடிகிறது? மேலும் இந்த வழக்கில் நீதி கிடைத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த குரலற்றவர்களின் குரலாக இறுதிவரை உயிர் உருக அருகில் நின்ற கோவிந்தன் யார் என்பதையும், அவரின் தியாகத்தையும் மறந்தீர்களா? அல்லது மறைத்தீர்களா?

சில நுாற்றாண்டுகளாகவே இந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாத ஒரு கூட்டம் தங்களின் அரசியலுக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் வடக்கே வன்னியர்கள், பட்டியல் சமூகத்தினரை அடித்துக் கொல்ல வைத்ததோடு மட்டுமல்லாமல் தெற்கே தேவர்கள், தேவேந்திர குல வேளாளர்கள் இடையிலேயும் கலவரத்தை உருவாக்கி தமிழர் குடிகளுக்குள் நிரந்தர பகையினை உருவாக்கி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நேர்மையற்ற காட்சியினை நீக்குவதோடு, தங்களையும் சரி செய்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
சாதனை படமா 181சாதனை படமா 181 ஜெய் பீம் - சர்ச்சைக்குரிய 'காலண்டர்' படம் நீக்கம் ஜெய் பீம் - சர்ச்சைக்குரிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

kmathivanan - Trichy ,இந்தியா
10 நவ, 2021 - 15:19 Report Abuse
kmathivanan இந்த நாலடி பையனுக்கு இதே வேலை , உண்மை சம்பவதில் பொய்யா சொல்லி யாருக்காகவோ கூலிவேலை பார்கிறார்.
Rate this:
Sankar - Madurai,இந்தியா
09 நவ, 2021 - 17:12 Report Abuse
Sankar அந்த வழக்கை எடுத்துக்கொண்டால் அது காவல்துறையின் எதேச்சாதிகாரமான அத்துமீறலாகத்தான் இருக்கிறதே தவிர , எந்தவிதமான சமூக மனத்தாங்கல்களும் இல்லை. சில ஆண்டுகளாகவே எதிலும் ஜாதி (குறிப்பிட்டால் சில ஜாதிகள்) பேசும் படங்களுக்கு மட்டுமே பைனான்ஸ் கிடைக்கிறது, சில பெரிய ஹீரோக்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இந்த ஹீரோ தன்னை பெரிய ஹீரோவாக நினைக்காமல் இருப்பதை பாராட்டலாமே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிறார்...
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
07 நவ, 2021 - 22:50 Report Abuse
Aarkay நாலடியாரின் எல்லாப்படங்களிலுமே இது போன்ற மாற்றங்கள் உண்டு. யாருக்கோ சாமரம் வீச, யாரையோ குஷிப்படுத்த மற்றும் கல்லாவில் காசு பார்க்க வரலாற்றை மாற்றி எழுதுவதே நாலடியாரின் வேலை. இதுபோன்ற வன்மத்தை தூண்டிவிடும் படங்களை தவிர்த்தாலே போதும். தானாய் அடங்கிவிடுவார்கள்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
07 நவ, 2021 - 04:54 Report Abuse
meenakshisundaram சினிமாலே மூணு சீட்டு விளையாடி ஏமாத்துகிறார் ஒரு படத்திலே -அந்த சூர்யா இப்ப தயாரிப்பிலேயும் அதே கவனத்துடன் உள்ளார் .
Rate this:
06 நவ, 2021 - 17:35 Report Abuse
கோவிந்தா ஹைய்யா..... கரடியே காரி துப்பிடுச்சு.......
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in