ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மெட்டி ஒலி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிருத்திகா அண்ணாமலை. வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் மரகதவீணை, பாசமலர், கல்யாண பரிசு, வம்சம் என பல ஹிட் தொடர்களில் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட கிருத்திகா நடிப்புக்கு ப்ரேக் போட்டுவிட்டு வீட்டை பார்க்க சென்று விட்டார். தற்போது சன் டிவியின் 'பாண்டவர் இல்லம்' என்ற மெகாத்தொடரில் ரேவதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு சூப்பரான கம்பேக்கை கொடுத்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் கிருத்திகாவின் ப்ரொபைலை தேடி அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இன்ஸ்டாவில் சூப்பரான பிட்னஸுடன் இருக்கும் க்ருத்திகாவின் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவர் சிங்கிளாக தான் இருப்பார் என நினைத்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் 'ஆஸ்க் மீ' டாஸ்க்கை இன்ஸ்டாகிராமில் ஓப்பன் செய்த கிருத்திகாவிடம் அவரது தீவிர ரசிகர் ஒருவர் 'என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?' என்று கேட்டு் பதிவிட்டுள்ளார். அதற்கு தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள கிருத்திகா 'இவர் என் மகன் சகோதரா' என டீசெண்ட்டாக பதிலளித்துள்ளார். ஆர்வக்கோளறில் அந்த ரசிகர் கேட்ட கேள்விக்கு மிகவும் பொறுப்புடன் பதில் சொன்ன கிருத்திகாவை மற்ற ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.