'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
சின்னத்திரையில் முன்னணி நாயகியாக வலம் வந்த ரச்சிதா சினிமாவில் என்ட்ரி கொடுத்ததையடுத்து சீரியலில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார்.
விஜய் டிவி சீரியல்களின் மூலம் நடிகையாக அறிமுகமான ரச்சிதா, தற்போது சின்னத்திரையில் பிரபலமான முகமாக இருந்து வருகிறார். சரவணன் மீனாட்சி தொடரின் அடுத்தடுத்த சீசன்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரச்சிதா, தற்போது 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீசன் 2-விலும் கலக்கி வந்தார்.
இந்நிலையில் இவருக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கன்னட படத்தின் மூலம் கிடைத்தது. இதனையடுத்து அவர் சீரியலை விட்டு விலகுகிறார் என்ற செய்திகள் சில மாதங்களுக்கு முன் பரவலாக வலம் வந்தன. ஆனால், அப்போது அதை மறுத்த ரச்சிதா, 'போற வரைக்கும் போவோம்! தானா ஸ்டாப் ஆன பாத்துக்கலாம். சீரியலை விட்டு போறேன் போறேன்னு சொல்லி சொல்லி நீங்களே போக வைச்சுடாதீங்க' என கிண்டலாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் விஜய் டிவிக்கு பை சொல்லிவிட்டு சினிமாவிற்குள் மொத்தமாக நுழைகிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரச்சிதா 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வின் மஹாலெட்சுமி கெட்டப்பில் போட்டோவை வெளியிட்டு கேப்ஷனாக 'பை மஹா' என பதிவிட்டுள்ளார். ரச்சிதா சின்னத்திரையை விட்டு முழுதாக விலகியுள்ள செய்தி சில ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.