ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சின்னத்திரையில் முன்னணி நாயகியாக வலம் வந்த ரச்சிதா சினிமாவில் என்ட்ரி கொடுத்ததையடுத்து சீரியலில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார்.
விஜய் டிவி சீரியல்களின் மூலம் நடிகையாக அறிமுகமான ரச்சிதா, தற்போது சின்னத்திரையில் பிரபலமான முகமாக இருந்து வருகிறார். சரவணன் மீனாட்சி தொடரின் அடுத்தடுத்த சீசன்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரச்சிதா, தற்போது 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீசன் 2-விலும் கலக்கி வந்தார்.
இந்நிலையில் இவருக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கன்னட படத்தின் மூலம் கிடைத்தது. இதனையடுத்து அவர் சீரியலை விட்டு விலகுகிறார் என்ற செய்திகள் சில மாதங்களுக்கு முன் பரவலாக வலம் வந்தன. ஆனால், அப்போது அதை மறுத்த ரச்சிதா, 'போற வரைக்கும் போவோம்! தானா ஸ்டாப் ஆன பாத்துக்கலாம். சீரியலை விட்டு போறேன் போறேன்னு சொல்லி சொல்லி நீங்களே போக வைச்சுடாதீங்க' என கிண்டலாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் விஜய் டிவிக்கு பை சொல்லிவிட்டு சினிமாவிற்குள் மொத்தமாக நுழைகிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரச்சிதா 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வின் மஹாலெட்சுமி கெட்டப்பில் போட்டோவை வெளியிட்டு கேப்ஷனாக 'பை மஹா' என பதிவிட்டுள்ளார். ரச்சிதா சின்னத்திரையை விட்டு முழுதாக விலகியுள்ள செய்தி சில ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




