கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! |
இயக்குனர் விஜய் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இயக்கிய தியா படத்தில் நாயகனாக நடித்தவர் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் நாக சவுர்யா. கடந்த வாரம் இவர் நடித்த வருடு காவலேன்னு என்கிற படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் இவரது பண்ணை வீட்டில் சூதாட்டம் ஆடியதாக சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஆந்திராவில் ஒரு பண்ணை வீட்டில் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்து அதன் அடிப்படையில் அங்கு போலீஸார் சோதனை செய்தபோது சூதாட்ட விளையாட்டுக்களில் சுமார் 25 பேர் பணம் கட்டி ஈடுபட்டிருந்தனராம். அவர்களிடம் இருந்து ரொக்கமாக 25 லட்சம் வரை போலீசார் பறிமுதல் செய்தனராம்.
விசாரணையில் அந்த பண்ணை வீடு நடிகர் நாக சவுர்யாவுடையது என்பது தெரிய வந்துள்ளதாம். அதேசமயம் அது அவரது சொந்த பண்ணை வீடு அல்ல என்றும் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒருவருக்கு சொந்தமான அந்த பண்ணை வீட்டை நாக சவுர்யா லீஸுக்கு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போதுவரை இதுகுறித்து நாக சவுர்யா எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.