நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தென்னிந்திய நட்சத்திரங்களாக இருந்தாலும் சிலர் மும்பையில் செட்டிலாவது தான் தற்போதைய பேஷனாக உள்ளது. ஏற்கெனவே ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் மும்பையில் செட்டிலாகி உள்ளனர். ராஷ்மிகாக மந்தனா சமீபத்தில் புதிய வீடு ஒன்றை மும்பையில் வாங்கினார். தற்போது 'பீஸ்ட்' படக் கதாநாயகி மும்பையில் வீடு வாங்கியுள்ளார்.
அந்த வீட்டில் நடைபெறும் வேலைகளை அவர் மேற்பார்வையிட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். “எனது கனவுகளை கட்டிக் கொண்டிருக்கிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பூஜா குடும்பத்தினர் மும்பையில் செட்டிலாகி உள்ளனர். பூஜாவின் அம்மா தான் தற்போது வீட்டின் கட்டிட வேலைகளை மேற்பார்வை செய்து வருகிறாராம்.
பூஜா ஹெக்டே தமிழில் 'பீஸ்ட்' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடிக்கப் போகிறார். தெலுங்கில் நடித்துள்ள 'ராதே ஷ்யாம், ஆச்சார்யா' விரைவில் வெளிவர உள்ளன.