புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தென்னிந்திய நட்சத்திரங்களாக இருந்தாலும் சிலர் மும்பையில் செட்டிலாவது தான் தற்போதைய பேஷனாக உள்ளது. ஏற்கெனவே ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் மும்பையில் செட்டிலாகி உள்ளனர். ராஷ்மிகாக மந்தனா சமீபத்தில் புதிய வீடு ஒன்றை மும்பையில் வாங்கினார். தற்போது 'பீஸ்ட்' படக் கதாநாயகி மும்பையில் வீடு வாங்கியுள்ளார்.
அந்த வீட்டில் நடைபெறும் வேலைகளை அவர் மேற்பார்வையிட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். “எனது கனவுகளை கட்டிக் கொண்டிருக்கிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பூஜா குடும்பத்தினர் மும்பையில் செட்டிலாகி உள்ளனர். பூஜாவின் அம்மா தான் தற்போது வீட்டின் கட்டிட வேலைகளை மேற்பார்வை செய்து வருகிறாராம்.
பூஜா ஹெக்டே தமிழில் 'பீஸ்ட்' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடிக்கப் போகிறார். தெலுங்கில் நடித்துள்ள 'ராதே ஷ்யாம், ஆச்சார்யா' விரைவில் வெளிவர உள்ளன.