எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அடுத்ததாக திரையுலகில் காதல் திருமணம் செய்யலாம் என் நினைப்பவர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக, நடிகை சமந்தா மற்றும் அவரது தனது கணவர் நாகசைதன்யாவின் திருமண முறிவு அமைந்துவிட்டது. ஆனால் அதன்பின் சோர்ந்து போய் வீட்டிலேயே அமர்ந்து விடாமல், படப்பிடிப்பு, புனித தளங்களில் வழிபாடு என பிஸியாக சுற்றி வருகிறார் சமந்தா. இந்தநிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பெண்களை பெற்ற பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக ஒரு பதிவிட்டுள்ளார் சமந்தா..
அதில், “உங்கள் மகள் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பதை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் மகளை வலிமையானவளாக தயார் செய்யுங்கள். அவளது திருமணத்திற்காக பணம் சேர்த்து வைப்பதற்கு பதிலாக அவளது கல்விக்கு செலவிடுங்கள். முக்கியமாக அவளை திருமணத்திற்கு தயார் செய்வதற்கு பதிலாக அவளை அவளாகவே தயார் செய்து கொள்ளும்படி உருவாக்குங்கள். அவளுக்கு தன்னைத்தானே நேசிக்கவும் தன்னம்பிகையையை வளர்த்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்” என ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார் சமந்தா.