மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் |

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகிறார்கள். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று நயன்தாராவே ஒரு டிவி பேட்டியில் தெரிவித்தார். இதனிடையே, ஹிந்தியில் ஷாரூக்கானுடன் நயன்தாரா நடிக்கவிருந்த படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
போதைக் பொருள் வழக்கில் ஷாரூக்கான் மகன் சிக்கி சிறையில் இருப்பதால் அவர் தன்னுடைய ஹிந்திப் பட படப்பிடிப்பை நிறுத்திவிட்டார். அட்லீ இயக்கி வரும் அந்தப் படம் மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு தள்ளிப் போவதால் ஏற்கெனவே மற்ற படங்களுக்காகக் கொடுத்த தேதிகளுக்கு சிக்கல் வரும் என்பதால் அப்படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறார் என்கிறார்கள்.
இருந்தாலும் இந்த வருடத்தில் நயன்தாரா திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காகத்தான் சமீபத்தில் கோவில்களுக்குச் சென்று வந்தார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன. திருமணத் திட்டம் காரணமாகவும் ஷாரூக்கான் படத்திலிருந்து விலகக் காரணம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி நயன்தாராவிடமிருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே இது உண்மையா, பொய்யா என்பது தெரிய வரும்.