ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து தியேட்டரிலும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் என்.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு, தியேட்டரில் 100 சதவீத இருக்கைகளில் மக்கள் அமர்ந்து படம் பார்க்க ஆணை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்த வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இருகரம் குவித்து நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.