ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கன்னட மொழியை சிறுமைப்படுத்தவில்லை : நடக்கும் பிரச்னை வேதனை அளிப்பதாக கமல் அறிக்கை | பரமசிவன் பாத்திமாவுக்கு மறு தணிக்கையில் 'ஏ ' சான்றிதழ் | பிளாஷ்பேக்: ஹீரோயின்கள் ஆன லலிதா, பத்மினி | தமிழுக்கு வரும் ஸ்ராவணி ஷெட்டி | பிலிம் சேம்பர் மூலம் கட்டண உயர்வுக்கு விண்ணப்பித்த பவன் கல்யாண் படத் தயாரிப்பாளர் | பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் | ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் |
தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து தியேட்டரிலும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் என்.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு, தியேட்டரில் 100 சதவீத இருக்கைகளில் மக்கள் அமர்ந்து படம் பார்க்க ஆணை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்த வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இருகரம் குவித்து நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.