சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்புச் செய்தியாக சமந்தா, நாக சைதன்யா பிரிவு இருந்து வந்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார் சமந்தா. தற்போது தனது தோழியுடன் ரிஷிகேஷ் சுற்றுப்பயணத்திற்கச் சென்றுள்ளார். ஷில்பா ரெட்டி என்ற சமந்தாவின் தோழி அந்த சுற்றுப் பயணம் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“டேக் ஆப், முதலில் யமுனோத்ரி” என அவர் குறிப்பிட்டுள்ளார். வட இந்தியாவில் சர் தம் யாத்ரா என்பது இந்துக்கள் அதிகம் செல்லும் ஒரு யாத்திரை. இமாலய மலைப் பிரதேசங்களான கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குச் செல்லும் யாத்திரை அது. உத்தரகாண்ட்டில் கடும் மழை பெய்ததால் இன்னும் பத்ரிநாத் செல்வதற்கான சாலைகள் திறக்கப்படவில்லை.
கிறிஸ்துவராக இருந்தாலும் சமந்தா இந்து மதக் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருவார். தற்போது வட இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
விஜய் சேதுபதி, நயன்தாரவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.