ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்புச் செய்தியாக சமந்தா, நாக சைதன்யா பிரிவு இருந்து வந்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார் சமந்தா. தற்போது தனது தோழியுடன் ரிஷிகேஷ் சுற்றுப்பயணத்திற்கச் சென்றுள்ளார். ஷில்பா ரெட்டி என்ற சமந்தாவின் தோழி அந்த சுற்றுப் பயணம் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“டேக் ஆப், முதலில் யமுனோத்ரி” என அவர் குறிப்பிட்டுள்ளார். வட இந்தியாவில் சர் தம் யாத்ரா என்பது இந்துக்கள் அதிகம் செல்லும் ஒரு யாத்திரை. இமாலய மலைப் பிரதேசங்களான கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குச் செல்லும் யாத்திரை அது. உத்தரகாண்ட்டில் கடும் மழை பெய்ததால் இன்னும் பத்ரிநாத் செல்வதற்கான சாலைகள் திறக்கப்படவில்லை.
கிறிஸ்துவராக இருந்தாலும் சமந்தா இந்து மதக் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருவார். தற்போது வட இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
விஜய் சேதுபதி, நயன்தாரவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.