நாளை ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை! | ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது |

டாப்ஸீ கதாநாயகியாக நடித்த 'ராஷ்மி ராக்கெட்' கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆகர்ஷ் குரானா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தமிழ் சினிமா இயக்குனரான நந்தா பெரியசாமி கதை எழுதியுள்ளார். இப்படத்தை பாலிவுட் விமர்சகர்களும், ஊடகங்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளன. படத்திற்கு நல்லதொரு வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆனால், இந்தப் படம் குறித்து இங்குள்ளவர்கள் கண்டு கொள்ளவில்லை என நந்தா பெரிய சாமி வேதனையுடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
“ராஷ்மி ராக்கெட் படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சிக்காக இன்று அந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னை மும்பை அழைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே சினிமாக்கார்ர்கள் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. எந்த மீடியாவும் ஒரு பேட்டியும் எடுக்கவில்லை. கதையில் ராஷ்மிக்கு இழைக்கப்பட்ட அநீதி நிஜத்தில் கதாசிரியருக்கும் நடந்திருக்கிறது. வாழ்க தமிழ்...வேதனையுடன் நந்தா பெரியசாமி,” என அவர் பதிவிட்டுள்ளார்.
நந்தா பெரியசாமி தற்போது தமிழில் சேரன், கௌதம் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.