2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் |
டாப்ஸீ கதாநாயகியாக நடித்த 'ராஷ்மி ராக்கெட்' கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆகர்ஷ் குரானா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தமிழ் சினிமா இயக்குனரான நந்தா பெரியசாமி கதை எழுதியுள்ளார். இப்படத்தை பாலிவுட் விமர்சகர்களும், ஊடகங்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளன. படத்திற்கு நல்லதொரு வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆனால், இந்தப் படம் குறித்து இங்குள்ளவர்கள் கண்டு கொள்ளவில்லை என நந்தா பெரிய சாமி வேதனையுடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
“ராஷ்மி ராக்கெட் படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சிக்காக இன்று அந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னை மும்பை அழைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே சினிமாக்கார்ர்கள் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. எந்த மீடியாவும் ஒரு பேட்டியும் எடுக்கவில்லை. கதையில் ராஷ்மிக்கு இழைக்கப்பட்ட அநீதி நிஜத்தில் கதாசிரியருக்கும் நடந்திருக்கிறது. வாழ்க தமிழ்...வேதனையுடன் நந்தா பெரியசாமி,” என அவர் பதிவிட்டுள்ளார்.
நந்தா பெரியசாமி தற்போது தமிழில் சேரன், கௌதம் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.