விஜய்சேதுபதி, மணிகண்டன் கூட்டணியில் முத்து என்கிற காட்டான் : டீசர் வெளியீடு | ரோபோ சங்கர் இறுதி சடங்கு : உருக்கமாக பேசிய விமல் | நடிகை பலாத்கார வழக்கு : திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு | பிளாஷ்பேக்: ஆஸ்தான இயக்குனருக்காக கவுரவ தோற்றத்தில் நடித்த சிவாஜி | அரசியல் படத்தில் அபர்ணதி | ஒரே நேரத்தில் தயாராகும் 2 ஐயப்பன் படங்கள் | 'கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் | இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை |

டாப்ஸீ கதாநாயகியாக நடித்த 'ராஷ்மி ராக்கெட்' கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆகர்ஷ் குரானா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தமிழ் சினிமா இயக்குனரான நந்தா பெரியசாமி கதை எழுதியுள்ளார். இப்படத்தை பாலிவுட் விமர்சகர்களும், ஊடகங்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளன. படத்திற்கு நல்லதொரு வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆனால், இந்தப் படம் குறித்து இங்குள்ளவர்கள் கண்டு கொள்ளவில்லை என நந்தா பெரிய சாமி வேதனையுடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
“ராஷ்மி ராக்கெட் படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சிக்காக இன்று அந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னை மும்பை அழைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே சினிமாக்கார்ர்கள் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. எந்த மீடியாவும் ஒரு பேட்டியும் எடுக்கவில்லை. கதையில் ராஷ்மிக்கு இழைக்கப்பட்ட அநீதி நிஜத்தில் கதாசிரியருக்கும் நடந்திருக்கிறது. வாழ்க தமிழ்...வேதனையுடன் நந்தா பெரியசாமி,” என அவர் பதிவிட்டுள்ளார்.
நந்தா பெரியசாமி தற்போது தமிழில் சேரன், கௌதம் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.