சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'டாக்டர்'. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மக்களை தியேட்டர்கள் பக்கம் அதிகம் வரவழைத்த படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது. படம் வெளிவந்து பத்து நாட்கள் கடந்துள்ள நிலையில் ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
50 சதவீத இருக்கைகளில் இந்த அளவிற்கு வசூல் என்பது மிகவும் ஆச்சரியம் என மிரண்டு கிடக்கிறது தமிழ்த் திரையுலகம். கொரோனா முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது விஜய்யின் 'மாஸ்டர்' படம்தான் தியேட்டர்களைக் காப்பாற்றியது. அதற்குப் பிறகு வந்த படங்களில் 'சுல்தான், கர்ணன்' படங்கள் ஓரளவிற்கு வசூலித்தது. இப்படங்கள் நல்ல வசூலைப் பெறுவதற்கு முன்பாக கொரானோ இரண்டாவது அலை வந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது அலைக்குப் பிறகு 'டாக்டர்' படம் வசூல் என்பது 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு அதிக வசூல் என்றும் சொல்கிறார்கள். தீபாவளி வரை வேறு பெரிய படங்கள் போட்டிக்கு இல்லாத காரணத்தால் 'மாஸ்டர்' வசூலை நெருங்கினாலும் ஆச்சரியப்படுதவற்கில்லை என்கிறார்கள்.
'டாக்டர்' பட வெளியீட்டுச் சிக்கலில் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்து படம் வெளிவர பேருதவி புரிந்த சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் முழு சம்பளத்தையும் கொடுத்துவிடுவார் என்றே தெரிகிறது.