அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

நாக சைதன்யாவுடனான பிரிவை அறிவித்த சமந்தா சில நாட்களாக ஓய்வில் இருந்தார். மன அமைதிக்காக கோவில்களுக்கு சென்று வந்தார். தற்போது விவாகரத்து தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை தனது வழக்கறிஞரிடம் ஒப்படைத்து விட்டு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை புதுமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார். படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. தமிழில் ஒரு புது முயற்சியாக பேண்டஸி ரொமாண்டிக் படமாக , பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.




