மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் | அந்த ஹீரோவின் கால்ஷீட் கிடைக்காததால் தான் வாத்தி படத்தில் தனுஷ் நடித்தார் : வெங்கி அட்லூரி | லோகா படம் நேரடியாக தெலுங்கில் உருவாகி இருந்தால் வெற்றி பெற்றிருக்காது : தயாரிப்பளர் நாகவம்சி | 'ஆர்யன்' படத்தில் அமீர்கான் நடிக்காதது ஏன்? விஷ்ணுவிஷால் சொன்ன புது தகவல் |
கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள், மால்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்களை திறக்க தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தன. அதன்படி தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
ஊரடங்கு தளர்த்துவதன் ஒரு பகுதியாக தற்போது 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நவம்பர் முதல் தேதியிலிருந்து அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதற்கு ஆந்திர அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஏற்கெனவே தெலுங்கானா மாநிலத்தில் 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கி வருகிறது. தற்போது ஆந்திராவிலும் நேற்று முதல் 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்படுவதால் தெலுங்கு திரையுலகினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.