'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமானாலும் கடும் போராட்டங்களுக்கு பின்னர் முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் அருண் விஜய். அவர் தற்போது ஹரி இயக்கத்தில் 'யானை' படத்தில் நடித்து வருகிறார்.
ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக ஹரியுடன் அருண் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுதவிர இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருப்பவர் அருண் விஜய். தன்னுடைய படம் தொடர்பாக பல்வேறு தகவல்களை ட்விட்டர் பக்கம் மூலமாகத்தான் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அருண் விஜய், ட்விட்டர் பக்கத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதுவென்றால் அருண் விஜய், டுவிட்டர் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகர் அருண் விஜய் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதோடு இதற்கு காரணமான ரசிகர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்.




