22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமானாலும் கடும் போராட்டங்களுக்கு பின்னர் முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் அருண் விஜய். அவர் தற்போது ஹரி இயக்கத்தில் 'யானை' படத்தில் நடித்து வருகிறார்.
ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக ஹரியுடன் அருண் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுதவிர இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருப்பவர் அருண் விஜய். தன்னுடைய படம் தொடர்பாக பல்வேறு தகவல்களை ட்விட்டர் பக்கம் மூலமாகத்தான் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அருண் விஜய், ட்விட்டர் பக்கத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதுவென்றால் அருண் விஜய், டுவிட்டர் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகர் அருண் விஜய் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதோடு இதற்கு காரணமான ரசிகர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்.