பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நதியா உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது மீண்டும் திரையுலகிலற்கு வந்துள்ள அவர் செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்தவகையில் மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் பீஷ்ம பர்வம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நதியா.
இந்தப்படத்தில் இவருடன் இணைந்து இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மலையாள குணச்சித்திர நடிகை லேனா. நதியாவுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள லேனா, “நதியாவை படப்பிடிப்பு தளத்தில் பார்க்கும்போதெல்லாம் அவரது எக்ஸ்ரே கண்ணாடி காமெடி தான் உடனே ஞாபகத்திற்கு வந்தது.. நல்லிதயம் கொண்ட இந்த ராணியுடன் இணைந்து நடித்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி” என சிலாகித்து கூறியுள்ளார்.
மலையாளத்தில் நதியா நடித்த நோக்கத்தே கண்ணெட்டும் தூரத்து (தமிழில் பூவே பூச்சூடவா) படத்தில் அவர் அணிந்துகொண்டு கலாட்டா பண்ணிய அந்த எக்ரே கண்ணாடி காமெடியைத்தான் லேனா குறிபிட்டுள்ளார்.