மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

மலையாள திரை உலகில் கடந்த 15 வருடங்களாக குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் லேனா. இவர் தமிழில் தனுஷின் அனேகன் மற்றும் திரவுபதி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் தனது பேட்டிகளில் பல விஷயங்களை தத்துவார்த்தமாக பேசுவார் லேனா. அவ்வளவு ஏன், தான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து அதற்கான நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது யாரை விவாகரத்து செய்ய நினைத்தாரோ அவருடனேயே அமர்ந்து குலோப் ஜாமூன் சாப்பிடும் அளவிற்கு வாழ்க்கையை ரொம்ப எளிதாக எடுத்துக் கொள்பவர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் முற்பிறவியில் திபெத் அருகே உள்ள பகுதியில் ஒரு புத்த துறவியாக இருந்ததாக கூறி அதிர வைத்துள்ளார். அதன் தூண்டுதல் காரணமாகவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் மொட்டை அடித்துக் கொண்டதாகவும் கூறியுள்ள லேனா, அடுத்து சொன்னது தான் இன்னும் அதிர்ச்சியான விஷயம். நடிகர் மோகன்லாலுடன் தனக்கு ஒரு ஆன்மிகத் தொடர்பு இருந்து வருவதாகவும் அவரை தனது ஆன்மிக குருவாக கருதுவதாகவும் கூறியுள்ளார் லேனா.