என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்குத் திரையுலகின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவர் நாகேஸ்வர ராவ். பல அற்புதமான படங்களில் வெற்றிகரமான படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் அவர் கதாநாயகனாக நடித்து 1953ல் வெளிவந்த 'தேவதாஸ்' படம் 68 வருடங்கள் கழித்து காதல் படங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கிறது.
2014ம் ஆண்டு மறைந்த நாகேஸ்வரராவின் 99வது பிறந்த தினத்தை தெலுங்கு திரையுலகினர் இன்று கொண்டாடி வருகிறார்கள். அப்பா நாகேஸ்வரராவை நினைவு கூறும் வகையில் அவரது விருப்ப ஆடையான 'பஞ்சகச்ச வேஷ்டி' அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மகன் நாகார்ஜுனா.
அதில், “எனது அப்பாவை பஞ்சகச்ச வேட்டியில் ரசித்துப் பார்ப்பேன். இப்போது நான் அணிந்திருக்கும் 'பொன்டுரு காதி' எனது அப்பாவின் அபிமான ஆடை. அவரது நவரத்தினா செயின், மோதிரம் ஆகியவற்றையும் அணிந்துள்ளேன். நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் எனக்கும் சீனியர். அவரது அபிமான வாட்ச்தான் எனது அபிமான வாட்ச்சும் கூட. இவை அனைத்தையும் அணியும் போது அவர் என்னுடனேயே இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பஞ்சகச்சத்தின் நேர்த்தியை உங்களுக்குக் கொண்டு வருவதுதான் எங்களது முயற்சி, ஏஎன்ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்,” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
'பங்கராஜு' என்ற படத்தில் இப்படி தனது அப்பாவின் உடைமைகளை அணிந்து நடித்து வருகிறார் நாகார்ஜுனா.