மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தெலுங்குத் திரையுலகின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவர் நாகேஸ்வர ராவ். பல அற்புதமான படங்களில் வெற்றிகரமான படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் அவர் கதாநாயகனாக நடித்து 1953ல் வெளிவந்த 'தேவதாஸ்' படம் 68 வருடங்கள் கழித்து காதல் படங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கிறது.
2014ம் ஆண்டு மறைந்த நாகேஸ்வரராவின் 99வது பிறந்த தினத்தை தெலுங்கு திரையுலகினர் இன்று கொண்டாடி வருகிறார்கள். அப்பா நாகேஸ்வரராவை நினைவு கூறும் வகையில் அவரது விருப்ப ஆடையான 'பஞ்சகச்ச வேஷ்டி' அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மகன் நாகார்ஜுனா.
அதில், “எனது அப்பாவை பஞ்சகச்ச வேட்டியில் ரசித்துப் பார்ப்பேன். இப்போது நான் அணிந்திருக்கும் 'பொன்டுரு காதி' எனது அப்பாவின் அபிமான ஆடை. அவரது நவரத்தினா செயின், மோதிரம் ஆகியவற்றையும் அணிந்துள்ளேன். நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் எனக்கும் சீனியர். அவரது அபிமான வாட்ச்தான் எனது அபிமான வாட்ச்சும் கூட. இவை அனைத்தையும் அணியும் போது அவர் என்னுடனேயே இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பஞ்சகச்சத்தின் நேர்த்தியை உங்களுக்குக் கொண்டு வருவதுதான் எங்களது முயற்சி, ஏஎன்ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்,” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
'பங்கராஜு' என்ற படத்தில் இப்படி தனது அப்பாவின் உடைமைகளை அணிந்து நடித்து வருகிறார் நாகார்ஜுனா.




