ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

தொண்ணூறுகளில் மலையாள திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ரிஷபாவா. 54 வயதான அவர் நேற்று காலை கொச்சியில் காலமானார். கடந்த சில வருடங்களாகவே சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணத்தை தழுவியுள்ளார். பிரித்விராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொண்ணூறுகளில் அலட்டிக் கொள்ளாத ஹைடெக் வில்லன், டீசன்டாக வில்லத்தனம் காட்டும் அரசியல்வாதி, துரோகம் செய்யும் உயர் போலீஸ் அதிகாரி போன்ற கேரக்டர்களுக்கு இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஆக இருந்தவர் தான் நடிகர் ரிஷபாவா. 1990-ல் வெளியான இன் ஹரிஹர் நகர் படத்தில் முதல் பாகத்தில் இவர் ஏற்று நடித்த ஜான் ஹோனாய் என்கிற கதாபாத்திரம் தான் இவரை ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலப்படுத்தியது.