குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் |
தொண்ணூறுகளில் மலையாள திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ரிஷபாவா. 54 வயதான அவர் நேற்று காலை கொச்சியில் காலமானார். கடந்த சில வருடங்களாகவே சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணத்தை தழுவியுள்ளார். பிரித்விராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொண்ணூறுகளில் அலட்டிக் கொள்ளாத ஹைடெக் வில்லன், டீசன்டாக வில்லத்தனம் காட்டும் அரசியல்வாதி, துரோகம் செய்யும் உயர் போலீஸ் அதிகாரி போன்ற கேரக்டர்களுக்கு இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஆக இருந்தவர் தான் நடிகர் ரிஷபாவா. 1990-ல் வெளியான இன் ஹரிஹர் நகர் படத்தில் முதல் பாகத்தில் இவர் ஏற்று நடித்த ஜான் ஹோனாய் என்கிற கதாபாத்திரம் தான் இவரை ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலப்படுத்தியது.