25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தொண்ணூறுகளில் மலையாள திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ரிஷபாவா. 54 வயதான அவர் நேற்று காலை கொச்சியில் காலமானார். கடந்த சில வருடங்களாகவே சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணத்தை தழுவியுள்ளார். பிரித்விராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொண்ணூறுகளில் அலட்டிக் கொள்ளாத ஹைடெக் வில்லன், டீசன்டாக வில்லத்தனம் காட்டும் அரசியல்வாதி, துரோகம் செய்யும் உயர் போலீஸ் அதிகாரி போன்ற கேரக்டர்களுக்கு இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஆக இருந்தவர் தான் நடிகர் ரிஷபாவா. 1990-ல் வெளியான இன் ஹரிஹர் நகர் படத்தில் முதல் பாகத்தில் இவர் ஏற்று நடித்த ஜான் ஹோனாய் என்கிற கதாபாத்திரம் தான் இவரை ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலப்படுத்தியது.