இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
லூசிபர் படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை நிரூபித்துவிட்டார் மலையாள நடிகர் பிரித்விராஜ். அதை தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்தே ப்ரோ டாடி என்கிற பெயரில் தனது இரண்டாவது படத்தையும் இயக்கி வருகிறார் பிரித்விராஜ். கதாநாயகிகளாக மீனா, கனிகா ஆகியோர் நடித்துவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் ஹைதராபத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
அங்கே தான் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் நடைபெற்றது. அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜெயம் ரவி படப்பிடிப்பு முடிந்து கிளம்புவதற்கு முன்னதாக பிரித்விராஜின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். உடன் அவரது மனைவி ஆர்த்தியும் சென்றுள்ளார். அந்தப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகை கனிகாவும் இவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.