கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் | 'பிரம்மயுகம்' டைரக்டரின் புதிய ஹாரர் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்-மஞ்சு வாரியர் | என்னிடம் கேட்காமலேயே கதையை மாற்றி விட்டார் ; வரலட்சுமி மீது 'சரஸ்வதி' பட கதாசிரியர் குற்றச்சாட்டு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது |

லூசிபர் படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை நிரூபித்துவிட்டார் மலையாள நடிகர் பிரித்விராஜ். அதை தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்தே ப்ரோ டாடி என்கிற பெயரில் தனது இரண்டாவது படத்தையும் இயக்கி வருகிறார் பிரித்விராஜ். கதாநாயகிகளாக மீனா, கனிகா ஆகியோர் நடித்துவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் ஹைதராபத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
அங்கே தான் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் நடைபெற்றது. அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜெயம் ரவி படப்பிடிப்பு முடிந்து கிளம்புவதற்கு முன்னதாக பிரித்விராஜின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். உடன் அவரது மனைவி ஆர்த்தியும் சென்றுள்ளார். அந்தப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகை கனிகாவும் இவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.