'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இதுநாள் வரை தெலுங்கு திரையுலகில் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நடைபெற்று வந்த நடிகர் சங்கத் தேர்தல், இந்த முறை கிட்டத்தட்ட மும்முனை போட்டிகளால் களைகட்ட தொடங்கியுள்ளது. விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், இளம் நடிகர் மஞ்சு விஷ்ணு, மற்றும் சீனியர் நடிகை ஜீவிதா ராஜசேகர் ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள்.
இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தலைமையின் கீழ், கிட்டத்தட்ட 27 பேர் கொண்ட வலுவான கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். தனது குழுவில் இணைந்து போட்டியிட இருக்கும் உறுப்பினர்களையும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்
சீனியர் நடிகை ஜெயசுதா, நடிகர் சாய்குமார், ஸ்ரீகாந்த், நாகிநீடு அனசுயா, பிரகதி, பிரம்மாஜி என பல பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ்ராஜ் தலைமையில் போட்டியிட உள்ளனர். இதில் நடிகர் சாய்குமார் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுவார் என்று தெரிகிறது.