தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இதுநாள் வரை தெலுங்கு திரையுலகில் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நடைபெற்று வந்த நடிகர் சங்கத் தேர்தல், இந்த முறை கிட்டத்தட்ட மும்முனை போட்டிகளால் களைகட்ட தொடங்கியுள்ளது. விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், இளம் நடிகர் மஞ்சு விஷ்ணு, மற்றும் சீனியர் நடிகை ஜீவிதா ராஜசேகர் ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள்.
இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தலைமையின் கீழ், கிட்டத்தட்ட 27 பேர் கொண்ட வலுவான கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். தனது குழுவில் இணைந்து போட்டியிட இருக்கும் உறுப்பினர்களையும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்
சீனியர் நடிகை ஜெயசுதா, நடிகர் சாய்குமார், ஸ்ரீகாந்த், நாகிநீடு அனசுயா, பிரகதி, பிரம்மாஜி என பல பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ்ராஜ் தலைமையில் போட்டியிட உள்ளனர். இதில் நடிகர் சாய்குமார் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுவார் என்று தெரிகிறது.