பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் |

இதுநாள் வரை தெலுங்கு திரையுலகில் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நடைபெற்று வந்த நடிகர் சங்கத் தேர்தல், இந்த முறை கிட்டத்தட்ட மும்முனை போட்டிகளால் களைகட்ட தொடங்கியுள்ளது. விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், இளம் நடிகர் மஞ்சு விஷ்ணு, மற்றும் சீனியர் நடிகை ஜீவிதா ராஜசேகர் ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள்.
இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தலைமையின் கீழ், கிட்டத்தட்ட 27 பேர் கொண்ட வலுவான கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். தனது குழுவில் இணைந்து போட்டியிட இருக்கும் உறுப்பினர்களையும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்
சீனியர் நடிகை ஜெயசுதா, நடிகர் சாய்குமார், ஸ்ரீகாந்த், நாகிநீடு அனசுயா, பிரகதி, பிரம்மாஜி என பல பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ்ராஜ் தலைமையில் போட்டியிட உள்ளனர். இதில் நடிகர் சாய்குமார் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுவார் என்று தெரிகிறது.




