டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள திரையுலகில், சக போட்டியாளர்களாக கருதப்படும் நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் ஈகோ பார்க்காமல் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பரிமாறிக் கொள்வதும், முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுகூடி தங்களது சந்தோசங்களை பரிமாறிக் கொள்வதுமாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், மலையாள சினிமாவில் இளம் நடிகர்களில் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும், பிரித்விராஜ், துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகிய மூவரும், தங்களது நட்பு வட்டத்தை ரொம்பவே பேணி காத்து வருகிறார்கள். அதற்கு மிக முக்கியமாக, பின்னணியில் இவர்களது மனைவிமார்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அப்படி சமீபத்தில் அவர்கள் தங்களது மனைவியருடன், ஒரு கெட் டுகெதர் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் ஒன்றை பஹத் பாசிலின் மனைவியான நடிகை நஸ்ரியா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகிவருகிறது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து எல்லாம் எந்த விவரத்தையும் நஸ்ரியா வெளியிடாததால், ரசிகர்களின் பார்வைக்காக மட்டுமே இதை வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது. அந்த வகையில் இந்த மூவரின் ரசிகர்களும் இவர்களது நட்பை பார்த்து ஆச்சரியப்பட்டு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்