கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தெலுங்கில் தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி இன்னும் சில காட்சிகளில் நடித்தால் அவரது வேலை முடிந்துவிடும். இதையடுத்து அவர் நடிப்பதற்காக இரண்டு ரீமேக் படங்கள் காத்திருகின்றன. ஒன்று மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர்.. இன்னொன்று அஜித் நடித்த வேதாளம். லூசிபர் ரீமேக்கை மோகன்ராஜா இயக்க, வேதாளம் ரீமேக்கை மெஹர் ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபாஸை வைத்து பில்லா படத்தை ரீமேக் செய்து இயக்கியவர்.
வேதாளம் படத்தின் கதை கோல்கட்டா நகர பின்னணியில் நடைபெறுவதால், படத்தின் முக்கியமான, அதேசமயம் சிரஞ்சீவி இடம்பெறாத மாண்டேஜ் காட்சிகளை கடந்த வருடம் நடைபெற்ற தசரா பண்டிகையின் போதே படமாக்கி விட்டாராம் மெஹர் ரமேஷ். இந்த மாண்டேஜ் காட்சிகளை படமாக்குவதற்கு மட்டும் முப்பது லட்சம் செலவு செய்துள்ளாராம் மெஹர் ரமேஷ். இதனால் லூசிபர் ரீமேக்கைவிட, வேதாளம் ரீமேக்கிற்கு தான் சிரஞ்சீவி முதல் சிக்னல் தருவார் என்றே தெரிகிறது.