சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
ஆந்திராவை சேர்ந்தவர் ரோகினி சிந்தூரி. கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த இவர் ஐஏஎஸ் தேர்வில் 43வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். கர்நாடக மாநிலத்தின் தும்குருவில் உதவி ஆணையராக தனது பணியை தொடங்கினார். அப்போது 42 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த மீட்டதன் மூலம் புகழ்பெற்றார். போக்குவரத்து ஒழுங்கு படுத்தல், ஆக்கிரமிப்பு அகற்றல் என அந்த பகுதியின் ஹீரோயின் ஆனார்.
மாண்டியா மாவட்ட அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் அங்குள்ள மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவது கண்டு திடுக்கிட்டார். அந்த மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் தனிப்பட்ட கழிப்பிடங்களை கட்டி முடித்தார். இந்தியாவின் 3வது சிறந்த மாவட்டமாக மாண்டியாவை மாற்றினார்.
இப்படி பல பணிகளால் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்த அவரது வாழ்க்கை பாரத சிந்தூரி என்ற பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக தயாராகிறது. இதனை ஸ்வர்ண சந்திரா என்ற இயக்குனர் இயக்குகிறார். ரோகினி சிந்தூரி வேடத்தில் அக்ஷிதா பாண்டபுரா நடிப்பார் என்று தெரிகிறது. படத்தின் தலைப்பை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ள இயக்குனர், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார்.