22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
ஆந்திராவை சேர்ந்தவர் ரோகினி சிந்தூரி. கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த இவர் ஐஏஎஸ் தேர்வில் 43வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். கர்நாடக மாநிலத்தின் தும்குருவில் உதவி ஆணையராக தனது பணியை தொடங்கினார். அப்போது 42 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த மீட்டதன் மூலம் புகழ்பெற்றார். போக்குவரத்து ஒழுங்கு படுத்தல், ஆக்கிரமிப்பு அகற்றல் என அந்த பகுதியின் ஹீரோயின் ஆனார்.
மாண்டியா மாவட்ட அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் அங்குள்ள மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவது கண்டு திடுக்கிட்டார். அந்த மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் தனிப்பட்ட கழிப்பிடங்களை கட்டி முடித்தார். இந்தியாவின் 3வது சிறந்த மாவட்டமாக மாண்டியாவை மாற்றினார்.
இப்படி பல பணிகளால் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்த அவரது வாழ்க்கை பாரத சிந்தூரி என்ற பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக தயாராகிறது. இதனை ஸ்வர்ண சந்திரா என்ற இயக்குனர் இயக்குகிறார். ரோகினி சிந்தூரி வேடத்தில் அக்ஷிதா பாண்டபுரா நடிப்பார் என்று தெரிகிறது. படத்தின் தலைப்பை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ள இயக்குனர், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார்.