'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஆந்திராவை சேர்ந்தவர் ரோகினி சிந்தூரி. கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த இவர் ஐஏஎஸ் தேர்வில் 43வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். கர்நாடக மாநிலத்தின் தும்குருவில் உதவி ஆணையராக தனது பணியை தொடங்கினார். அப்போது 42 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த மீட்டதன் மூலம் புகழ்பெற்றார். போக்குவரத்து ஒழுங்கு படுத்தல், ஆக்கிரமிப்பு அகற்றல் என அந்த பகுதியின் ஹீரோயின் ஆனார்.
மாண்டியா மாவட்ட அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் அங்குள்ள மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவது கண்டு திடுக்கிட்டார். அந்த மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் தனிப்பட்ட கழிப்பிடங்களை கட்டி முடித்தார். இந்தியாவின் 3வது சிறந்த மாவட்டமாக மாண்டியாவை மாற்றினார்.
இப்படி பல பணிகளால் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்த அவரது வாழ்க்கை பாரத சிந்தூரி என்ற பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக தயாராகிறது. இதனை ஸ்வர்ண சந்திரா என்ற இயக்குனர் இயக்குகிறார். ரோகினி சிந்தூரி வேடத்தில் அக்ஷிதா பாண்டபுரா நடிப்பார் என்று தெரிகிறது. படத்தின் தலைப்பை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ள இயக்குனர், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார்.