மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

உலகெங்கும் சகோதரர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள் பலர் சகோதரர் தின வாழ்த்துக்களையும் பதிவுகளையும் வெளியிட்டாலும், தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் சிறுவயது சிரஞ்சீவி தனது கையில் இளைய சகோதரர் நடிகர் பவன் கல்யாணை தூக்கி வைத்தபடி நின்றிருக்க, அருகில் அவர்களது இன்னொரு சகோதரர் நாகபாபு நிற்கிறார். சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த புகைப்படத்தில் பவன் கல்யாணை சிரஞ்சீவி தூக்கி வைத்திருப்பதை பார்க்கும்போது, சினிமாவிலும் அவர் நல்ல உயரத்திற்கு வரவேண்டும் என ஒரு சகோதரனாகவும் அடித்தளமிட்டு தந்ததை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.