மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வருபவர் பின்னணி பாடகி மதுபிரியா. சாய்பல்லவி நடித்த பிதா' படத்தில் 'வச்சிண்டே' என்கிற பாடலை பாடிய இவர், மகேஷ்பாபு நடித்த 'சரிலேறு நீக்கெவரு' படத்தில் ஹிட்டான 'ஹே சோ க்யூட்' பாடலையும் பாடியுள்ளார்.
இவர் தற்போது சோஷியல் மீடியா மூலமாக, மர்மநபர்கள் சிலர் தனக்கு தேவையில்லாத போன் அழைப்புகள் மற்றும் அருவறுக்கத்தக்க கமெண்ட்டுகள் மூலமாக தொந்தரவு கொடுத்து வருவதாக சைபர் கிரைம் போலீசில் ஈமெயில் மூலமாக புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு வந்த போன் அழைப்புகளுக்கான எண்களையும் அவர் போலீஸில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 509, 354(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், இதற்கென ஒரு தனி குழுவை நியமித்து விசாரித்து வருகின்றனர். மேலும் பெண்களின் பிரச்சனைகளில் முக்கிய கவனம் எடுத்து செயல்பட்டு 'அவள் (SHE) போலீசார் வசம் இந்த வழக்கை மாற்றவும் முடிவு செய்துள்ளனராம்.