மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் |

ஒரு பக்கம் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகிகொண்டு இருக்க, இன்னொரு பக்கம் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் ஆனா மருத்துவ உபகரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான நிகில் சித்தார்த்தாவும், பாலிவுட் நடிகர் சோனு சூட் பாணியில், தனது சோஷியல் மீடியா பக்கத்தில் மருத்துவ உதவி கேட்பவர்களுக்கு, கடந்த சில நாட்களாகவே, தேடிச்சென்று உதவிகளை செய்து வருகிறார்.
ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போர், இ-பாஸ் பெறவேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிகில் சித்தார்த், ஐதராபாத்தில் இதுபோன்ற மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக சென்றுகொண்டிருந்தபோது, அவரிடம் இ-பாஸ் இல்லாததால் வாகன சோதனையின்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மருத்துவ உதவிகள் செய்து வருவதாகவும், தற்போது நோயாளி ஒருவருக்காக மருந்துகளை கொண்டு சென்று கொண்டிருப்பதாக கூறியும் போலீசார் அவரை அனுமதிக்கவில்லையாம்.
இதுகுறித்து நிகில் சித்தார்த்தா கூறும்போது, “அத்தியாவசிய மருத்துவ உதவிகளுக்காக பயணிக்க இ-பாஸ் தேவையில்லை என்று தான் நினைத்திருந்தேன். அதுமட்டுமல்ல, இ-பாஸ் பெற கிட்டத்தட்ட பத்து முறைக்கு மேல் விண்ணப்பித்தும் சர்வர் பிரச்சனையால் கிடைக்கவில்லை. மருத்துவ அவசர உதவிகளை இ-பாஸ் இன்றி உடனே அனுமதிக்க வேண்டும்” என வருத்ததுடன் கூறியுள்ளார்.