கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்த ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், சிரஞ்சீவியின் ஆச்சர்யா, பிரபாஸின் ராதே ஷ்யாம் உள்பட பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலேயே நிறுத்தப்பட்டன.
ஆனபோதும் ஆந்திராவில் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கவில்லை என்பதால் தொடர்ந்து சில படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமந்தாவின் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பும் அப்படத்திற்காக ரூ. 6 கோடி மதிப்பில் போடப்பட்ட செட்டில் நடைபெற்று வருகிறது.
ஆனால் சமீபத்தில் தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடிய சமந்தா, அதன்பிறகு கொரோனா அலை காரணமாக சகுந்தலம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதனால் இப்போது மற்ற நடிகர் -நடிகைகளை வைத்து தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் டைரக்டர் குணசேகர். இதேபோல் நானி நடிக்கும் ஷியாம் சிங்கராய் என்ற படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.