புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தொண்ணூறுகளில் மலையாள சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களுக்கு முன் அரசியலில் இறங்கியதால் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்தநிலையில் மீண்டும் நடிப்புக்கு திரும்பி படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. ஆனால் தனது சக நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போல இளமையான கதாபாத்திரங்களில் நடிக்கமால், வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
அந்தவகையில் கடந்த வருடம் வெளியான 'வரனே ஆவிஷ்யமுண்டு' என்கிற படத்தில், ஒரு இளம்பெண்ணுக்கு தாயான ஷோபனாவை காதலிக்கும் வயதான பிரம்மச்சாரி வேடத்தில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் காவல் மற்றும் பாப்பன் ஆகிய படங்களில் அவர் ஹீரோவாக நடித்தாலும், அவை ஆக்சன் படங்களாக உருவாக்கி வந்தாலும் கபாலி ரஜினி போல நரைத்த தாடி மீசையுடன் சற்றே வயதான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான அந்தப்படங்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.