இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மோகன்லால் நடிப்பில் பிரமாண்ட வரலாற்று படமாக உருவாகியுள்ள படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. இயக்குனர் பிரிதயர்தஷன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் இந்தப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்தப்படத்தை மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் தான் தயாரித்துள்ளார். இந்தப்படத்திற்கு விருது கிடைத்ததை தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் சிலருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். மேலும் இந்த விருதை இந்திய கடற்படைக்கு அர்ப்பணிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் மோகன்லால்.
அதற்கு காரணமும் உள்ளது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வீரதீர சாகச வரலாறாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்த குஞ்சாலி மரைக்கார் கடல் அனுபவம் கொண்ட வீரர்களை ஒன்று திரட்டி, கடற்படையை உருவாக்கி, போர்த்துக்கீசியர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். இந்த மரைக்கார் கதாபாத்திரத்தில் தான் மோகன்லால் நடித்துள்ளார்.