இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மோகன்லால் நடிப்பில் பிரமாண்ட வரலாற்று படமாக உருவாகியுள்ள படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. இயக்குனர் பிரிதயர்தஷன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் இந்தப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்தப்படத்தை மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் தான் தயாரித்துள்ளார். இந்தப்படத்திற்கு விருது கிடைத்ததை தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் சிலருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். மேலும் இந்த விருதை இந்திய கடற்படைக்கு அர்ப்பணிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் மோகன்லால்.
அதற்கு காரணமும் உள்ளது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வீரதீர சாகச வரலாறாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்த குஞ்சாலி மரைக்கார் கடல் அனுபவம் கொண்ட வீரர்களை ஒன்று திரட்டி, கடற்படையை உருவாக்கி, போர்த்துக்கீசியர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். இந்த மரைக்கார் கதாபாத்திரத்தில் தான் மோகன்லால் நடித்துள்ளார்.