பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட பத்துக்கும் குறைவான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து பஹத் பாசில் தயாரித்து நடித்த 'சீ யூ சூன்' என்கிற படம் வெளியானது. கொரோனா தாக்கம் நிலவிய நேரத்திலேயே எடுக்கப்பட்டது என்பதால், அந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது பஹத் பாசில், தர்ஷனா ராஜேந்திரன், காமெடி நடிகர் சௌபின் சாஹிர் என மொத்தம் மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு இருள் என்கிற படம் உருவாகியுள்ளது.
இப்போது நிலைமை ஓரளவு சரியாகி விட்டதால், இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தப்படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாக இருக்கிறதாம். நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் .லாபகரமான தொகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாம். ஆனாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த விஷயத்தை அறிவிக்கவில்லை.
காரணம் இந்தப்படத்தை பஹத் பாசில் மற்றும் மம்முட்டியின் ஆதரவு தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் ஆகியோர் தான் இணைந்து தயாரித்துள்ளார்கள். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம்-2வை தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடிக்கு கொடுத்ததற்காக அவர் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். அதனால் மெதுவாக இந்த விஷயத்தை வெளியே அறிவிக்கலாம் என மௌனம் காக்கிறது பஹத் பாசில் தரப்பு.