‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட பத்துக்கும் குறைவான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து பஹத் பாசில் தயாரித்து நடித்த 'சீ யூ சூன்' என்கிற படம் வெளியானது. கொரோனா தாக்கம் நிலவிய நேரத்திலேயே எடுக்கப்பட்டது என்பதால், அந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது பஹத் பாசில், தர்ஷனா ராஜேந்திரன், காமெடி நடிகர் சௌபின் சாஹிர் என மொத்தம் மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு இருள் என்கிற படம் உருவாகியுள்ளது.
இப்போது நிலைமை ஓரளவு சரியாகி விட்டதால், இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தப்படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாக இருக்கிறதாம். நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் .லாபகரமான தொகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாம். ஆனாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த விஷயத்தை அறிவிக்கவில்லை.
காரணம் இந்தப்படத்தை பஹத் பாசில் மற்றும் மம்முட்டியின் ஆதரவு தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் ஆகியோர் தான் இணைந்து தயாரித்துள்ளார்கள். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம்-2வை தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடிக்கு கொடுத்ததற்காக அவர் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். அதனால் மெதுவாக இந்த விஷயத்தை வெளியே அறிவிக்கலாம் என மௌனம் காக்கிறது பஹத் பாசில் தரப்பு.