ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர். விஜயபுரி வீரன், பார்த்தால் பசிதீரும், அன்பே வா, அதே கண்கள், தெய்வ மகன், எங்கிருந்தோ வந்தாள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.
1983ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் 'பாயும்புலி' என்ற படத்தை தயாரித்தது. '36 சேம்பர் ஆப் ஷாலின்' என்ற புரூஸ் லீ படத்தின் பாணியில் அந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தது. இதற்காக சண்டை இயக்குனர் ஜூடோ ரத்னம், அதிரடியான சண்டை காட்சிகளை அமைத்திருந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
'முரட்டுக்காளை' படத்தில் ஜெய்சங்கரை வில்லனாக நடிக்க வைத்தது போன்று இந்த படத்திலும் ஒரு பிரபலத்தை அதிரடியாக களம் இறக்க முடிவு செய்தது. அப்போது ஏ.சி.திருலோகச்சந்தர் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிப்பதற்காகவே சினிமாவுக்கு வந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பு கடைசிவரை கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதை கவனித்த ஏவிஎம் நிறுவனம் 'பாயும்புலி' படத்தில் வில்லனாக நடிக்க ஏ.சி.திருலோகச்சந்தரை அணுகியது. கதையை கேட்ட திருலோகச்சந்தருக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் நடிக்க மறுத்து விட்டார்.
அதன்பிறகு வில்லன் கேரக்டருக்கு அப்போது வளர்ந்து வந்த கராத்தே மணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். சண்டை காட்சிகளை வடிவமைப்பது தொடர்பாக கராத்தே மணிக்கும், ஜூடோ ரத்தினத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் படத்தில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து ஜெய்சங்கர் வில்லனாக நடித்தார்.




