ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
கேரளாவில் பெண்களுக்கு எதிராக பேசி வந்த விஜய் பி.நாயர் என்பவர் மீது கருப்பு மை வீசி புகழ் பெற்றவர் பாக்யலட்சுமி. மலையாள சினிமாவின் முன்னணி டப்பிங் கலைஞர். 300க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். பெண்கள் அமைப்பில் பங்கேற்று வரும் சமூக செயற்பாட்டாளார்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி பற்றி, மலையாள திரைப்பட இயக்குனர் சந்திவிளா தினேஷ் அவதூறு கருத்துகளைக் கூறி யூடியூப்பில் வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பாக்கியலட்சுமி, போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அவரை கைது செய்து எச்சரித்து அனுப்பினர்.
தற்போது அவர் மீண்டும் அவதூறு கருத்துகளை வெளியிட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீசிலும், முதலமைச்சரிடமும் பாக்யலட்சுமி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், இயக்குனர் சந்திவிளா தினேஷை கைது செய்தனர்.