ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

கேரளாவில் பெண்களுக்கு எதிராக பேசி வந்த விஜய் பி.நாயர் என்பவர் மீது கருப்பு மை வீசி புகழ் பெற்றவர் பாக்யலட்சுமி. மலையாள சினிமாவின் முன்னணி டப்பிங் கலைஞர். 300க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். பெண்கள் அமைப்பில் பங்கேற்று வரும் சமூக செயற்பாட்டாளார்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி பற்றி, மலையாள திரைப்பட இயக்குனர் சந்திவிளா தினேஷ் அவதூறு கருத்துகளைக் கூறி யூடியூப்பில் வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பாக்கியலட்சுமி, போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அவரை கைது செய்து எச்சரித்து அனுப்பினர்.
தற்போது அவர் மீண்டும் அவதூறு கருத்துகளை வெளியிட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீசிலும், முதலமைச்சரிடமும் பாக்யலட்சுமி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், இயக்குனர் சந்திவிளா தினேஷை கைது செய்தனர்.




