‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இதையடுத்து சிரஞ்சீவியின் 153வது படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்க உள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் ரீமேக் ஆக இந்தப்படம் உருவாகிறது.
இன்னும் 152வது படம் முடிவடையாத நிலையில் 153வது படம் துவங்கப்படாத நிலையில் அவரது 154வது படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா (பாபி) என்பவர் இயக்க உள்ளார் என்கிற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 'உப்பென்னா' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது, மேடையில் தானாகவே இதனை அறிவித்த சிரஞ்சீவி, இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது என்பதையும் அறிவித்தார்.
கன்னடம் மற்றும் தெலுங்கில் பிரபல கதாசிரியராக விளங்குபவர் இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா. கடந்த சில வருடங்களுக்கு முன் ரவிதேஜா நடித்த பவர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், பவன் கல்யாணின் கப்பார் சிங், ஜூனியர் என்.டி.ஆரின் ஜெய் லவகுசா மற்றும் வெங்கடேஷ் நடித்த வெங்கி மாமா ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.