செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி |
தமிழ், மலையாளத்தில் வெளிவந்த போர் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் சிரிண்டா. அதன் பிறகு 22 கோட்டையம், தட்டயன் மரையத்து, அன்னையும் ரசூலும், 1983, ஹேப்பி ஜேர்னி உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெண்ணிலா வீடு படத்திலும் நடித்தார்.
சிரிண்டா தனது 19வது வயதில் அஷப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். கடந்த 4 வருடத்திற்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்தும் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் சிரிண்டா மலையாள இயக்குனர் சுஜு எஸ்.பாவாவை காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது. பாவா, பஹத் பாசில், இஷா தல்வார் நடித்த நலே என்ற படத்தை இயக்கியவர். தங்கள் காதலை இருவரும் மறுக்காமல் இருந்து வந்தனர். இப்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் நடந்து ஒரு வாரம் ஆகிறது. இப்போதுதான் அந்த தகவல் வெளிவந்திருக்கிறது.