'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் சுசீந்திரனை போல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் மாறிவிட்டார் என்றே தெரிகிறது.. ஆம்.. சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் என மூன்று படங்களை அடுத்தடுத்து விரைவாக இயக்கி முடித்துவிட்டார்.
இதே பாணியில் இயக்குனர் ஜீத்து ஜோசப் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹிந்தியில் இம்ரான் ஹாஸ்மி, வேதிகாவை வைத்து தான் இயக்கிவந்த 'பாடி' என்கிற படத்தை 39 நாட்களில் முடித்தார். அந்தப்படம் முடித்த கையோடு மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்க ஆரம்பித்தார்.
கடந்த செப்-1௦ஆம் தேதி துவங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெறும் 42 நாட்களிலேயே முடிவடைந்து விட்டது. இதை தொடர்ந்து மீண்டும் தமிழுக்கு வரும் ஜீத்து ஜோசப், நடிகர் கார்த்தியை தனது அடுத்த படத்தில் இயக்கவுள்ளார்.