பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழில் சுசீந்திரனை போல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் மாறிவிட்டார் என்றே தெரிகிறது.. ஆம்.. சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் என மூன்று படங்களை அடுத்தடுத்து விரைவாக இயக்கி முடித்துவிட்டார்.
இதே பாணியில் இயக்குனர் ஜீத்து ஜோசப் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹிந்தியில் இம்ரான் ஹாஸ்மி, வேதிகாவை வைத்து தான் இயக்கிவந்த 'பாடி' என்கிற படத்தை 39 நாட்களில் முடித்தார். அந்தப்படம் முடித்த கையோடு மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்க ஆரம்பித்தார்.
கடந்த செப்-1௦ஆம் தேதி துவங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெறும் 42 நாட்களிலேயே முடிவடைந்து விட்டது. இதை தொடர்ந்து மீண்டும் தமிழுக்கு வரும் ஜீத்து ஜோசப், நடிகர் கார்த்தியை தனது அடுத்த படத்தில் இயக்கவுள்ளார்.




