தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். தமிழில் ஒரு பக்க கதை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் இதுவரை வெளிவரவில்லை. அதற்கு பிறகு அவர் நடித்து வெளிவந்த மீன் குழம்பும் மண்பானையும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது 5 மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து சந்தோஷன் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து சந்தோஷ் சிவன் கூறியிருப்பதாவது: மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்து கொடுத்து விட்டேன். அடுத்து மலையாளத்தில் படம் இயக்குகிறேன். இது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படம். இந்தியாவின் முன்னணி டெக்னீஷியன்கள் இதில் பணியாற்ற இருக்கிறார்கள். காளிதாஸ், மஞ்சுவாரியார் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஷோபின் ஷாகிர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அக்டோபர் 20ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.