போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மலையாளத்தில் கடந்தாண்டு வெளியான டேக் ஆப் படத்தை தொடர்ந்து பார்வதி நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை..அவரும் வதவதவென படங்களை ஒப்புக்கொள்ளாமல் செலக்டிவாகத்தானே நடிக்கிறார்.. அந்த இடைவெளியை போக்கும் விதமாக தற்போது பிருத்விராஜூடன் இணைந்து மை ஸ்டோரீஸ் மற்றும் கூடே என இரண்டு என்கிற படங்களில் நடித்துள்ளார் பார்வதி.
இதில் கூடே படம் வரும் ஜூலை-6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் மலையாள இயக்குனர் ரஞ்சித் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் நடித்த நாட்களில் ரஞ்சித்திற்குள் மறைந்திருந்த நடிப்பாற்றலை கண்டு ஆச்சர்யப்பட்ட பார்வதி, "நீண்ட நாளைக்குப்பிறகு திரையில் இப்படி ஒரு அற்புதமான தந்தை கேரக்டரை கண்டேன்.. படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனனும் இயக்குனர் ரஞ்சித்தும் சேர்ந்து அந்த அலோஷி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்கள்" என சிலாகித்து பாராட்டியுள்ளார் பார்வதி.