ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மலையாள சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் தான் கணேஷ்குமார். மலையாள நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமல்ல இவர் ஒரு எம்.எல்.ஏவும் கூட.. மூன்றுமுறை எம்.எல்.ஏவாக தேர்வான கணேஷ்குமார், இன்று காலை, தனது டிரைவருடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை அவரது தாயின் கண் முன்னே தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை கொல்லம் பகுதியில் ஒரு துக்க வீட்டிற்கு துக்கம் விசாரிக்க தனது காரில் சென்றார் கணேஷ்குமார். அந்த வீட்டை நெருங்கும்போது அதே வீட்டிலிருந்து கிளம்பி, தனது தாயுடன் வந்த அனந்தகிருஷ்ணன் என்கிற இளைஞர் தனது வாகனத்தை கணேஷ்குமார் காரின் முன்னால் நிறுத்தியதால் வழிவிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கோபத்துடன் காரில் இருந்து இறங்கிய கணேஷ்குமார் அந்த இளைஞரை அவரது தாயின் கண்முன்னே கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். உடன் கணேஷ்குமாரின் டிரைவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட நபர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிசை பெற்று வருகிறார்.