போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துவருபவர் மலையாள நடிகர் ஜெயசூர்யா. தற்போது 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜெயசூர்யாவை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கிவரும் இயக்குனரான ரஞ்சித் சங்கர் இயக்குகிறார்.
இந்தப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் சேலைகட்டித்தான் நடித்துள்ளாராம் ஜெயசூர்யா. கடந்த சில வருடங்களாக ஜெயசூர்யாவின் ஆடை வடிவமைப்பாளராக செயல்பட்டு வரும் அவரது மனைவி சரிதா தான் படம் முழுக்க சேலை கட்டிவிட்டுள்ளாராம்.
இதற்கு உதவியாக தனது தங்கையையும் உடன் சேர்த்துக்கொண்டாராம் சரிதா. சேலைகட்டி நடித்த பின்னர் அந்த அனுபவம் பற்றி கூறிய ஜெயசூர்யா, பெண்கள் எப்படித்தான் இந்த வெப்பத்தில் நாள் முழுக்க சேலை அணிந்து நடமாடுகிறார்களோ.. ஆச்சர்யமாக இருக்கிறது என கூறியுள்ளார்.