ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஆந்திராவில் ஒரு பக்கம் மாநிலத்தை வளர்ப்பதாக சொல்லிக் கொண்டு தன்னுடைய அரசியல் எதிரிகளை கீழ்த்தரமாக விமர்சனம் செய்ய வைத்து அவர்களது இமேஜை குலைக்கும் நடவடிக்கைகளில் முதல்வர் சந்திரபாபு நாயுடு இறங்குவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்தது.
ஸ்ரீரெட்டி விவகாரத்தில் அது இன்னும் அதிகமானது. நடிகர் பவன் கல்யாணைப் பற்றி கேவலமான கெட்ட வார்த்தையால் திட்டி, தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டார் ஸ்ரீரெட்டி. அப்படி அவரைச் செய்ய சொன்னதே ராம்கோபால் வர்மா தான் என்பது பின்னர் தெரியவந்தது. அதற்காக ராம்கோபால் வர்மா மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் நேற்று இரவு முதல் பவன்கல்யாண் தொடர்ச்சியாக டுவீட்டுகளைப் பதிவிட்டு சந்திரபாபு நாயுடுவுடன் நேரடி மோதலில் இறங்கிவிட்டார்.
“நடிகராக, அரசியல்வாதியாக ஆவதற்கு முன்பு நான் முதலில் ஒரு மகன். ஒரு மகனாக எனது அம்மாவின் பெருமையை நான் காப்பாற்றவில்லை என்றால் உயிர் வாழ்வதைவிட இறப்பதே மேல்,” என வருத்தத்துடன் ஒரு டுவீட் போட்டிருந்தார்.
தொடர்ந்து மீடியாக்களில் பவன் கல்யாண் பற்றியும், அவரது அம்மாவைப் பற்றியும் தரக்குறைவாக செய்தி வெளியிடுவதற்கு சிலர் உதவி புரிந்திருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். அதில் சில சேனல் உரிமையாளர்களும், இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் அடக்கம். “சிறப்பு அந்தஸ்து பற்றி செய்தி வெளியிடுவதை விட இந்த சேனல்கள் 'விபச்சாரம்” பற்றிதான் பேசிக் கொண்டிருக்கின்றன. உங்களுடைய முக்கியமான நோக்கம் என்ன” என்று சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டுள்ளார்.
“முக்கியமானது என்னவென்றால் இவர்களுக்கும் அம்மா, தங்கை, மகள்கள், மருமகள்கள் என இருப்பார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால், என்னுடைய ஏழை, 70 வயது அம்மா, அந்த சேனல்களின் டிஆர்பி மற்றும் அரசியல் லாபத்துக்காக அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்,” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.