போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடிகர் திலீப்புக்கு சொந்தமாக கேரளாவில் சாலக்குடியில் 'டி சினிமாஸ்' என்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர் உள்ளது. ஆனால் இந்த தியேட்டர்களை கட்டுவதற்காக அரசுக்கு சொந்தமான கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என திலீப் மீது பொதுநல வழக்கு கடந்த 2015ல் தொடுக்கப்பட்டது.
விசாரணையில் திலீப் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததும், போலியான ஆதாரங்கள் தயார் செய்ததையும் சாலக்குடி நகராட்சி உறுதி செய்தது. அதேசமயம் இதற்காக நியமிக்கப்பட்ட விஜிலன்ஸ் அதிகாரிகள், திலீப் எந்த விதமான நில அபகரிப்பிலும் ஈடுபடவில்லை என சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
ஆனால் இந்த அறிக்கையை திருச்சூரில் உள்ள விஜிலன்ஸ் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும் இந்த வழக்கில் முறையாக எப்.ஐ.ஆர் பதிந்து விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
நடிகை வழக்கில் நேற்று நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான திலீப்புக்கு, இந்த நில அபகரிப்பு வழக்கும் சேர்ந்து சிக்கலை உண்டாக்கும் என்றே தெரிகிறது.