போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மஞ்சு வாரியர் நடிப்பில் மலையாளம் இந்தி என இருமொழிகளில் உருவாகியுள்ள படம் 'ஆமி'. எழுத்தளார் கமலா சுரையா என்பவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகியுள்ள இந்தப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் கமல் இயக்கியுள்ளார். முதலில் பாலிவுட் நடிகை வித்யாபாலனை வைத்து தான் இந்தப்படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கினார் கமல்.
ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இந்தப்படத்தில் இருந்து வித்யாபாலன் விலகிவிட்டார். அதன்பின் மஞ்சு வாரியரை வைத்து, படத்தை இயக்கி முடித்தும் விட்டார் கமல். இருந்தாலும் தனக்கு மைக் கிடைக்கும்போதெல்லாம் வித்யாபாலனை பற்றி குறைசொல்வதை வாடிக்கையாகவே மாற்றிக்கொண்டுள்ளார் கமல்.
அப்படித்தான் சமீபத்தில் நிருபர் ஒருவர் வித்யாபாலன் குறித்து கேட்டதற்கு, “நல்லவேளை.. வித்யாபாலன் இந்தப்படத்தில் இருந்து தானாகவே விலகியது என் அதிர்ஷ்டம்.. இல்லையென்றால் அவரது கவர்ச்சிகரமான தோற்றம் இந்தப்படத்தின் கேரக்டரை வேறு மாதிரி பிரதிபலித்து கெடுத்திருக்கும். மஞ்சு வாரியர் தான் இந்த கேரக்டருக்கு பொருத்தமானவர்” என கூறி வருகிறார்.
இவரது விமர்சனங்கள் குறித்து வித்யாபாலன் பெரிதாக அலட்டிக்கொள்ளவும் இல்லை.. மறுபதில் அளிக்கவும் இல்லை. ஒருவேளை அவரே இதிலிருந்து விலகாமல் நடித்திருந்தால், அப்போது இதே வித்யாபாலனை கமல் இப்படி பேசியிருப்பாரா என அவர் மீது பலரும் கண்டனங்களை வீசி வருகின்றனர்.