ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
இந்திய சினிமாவை பிரமிக்க வைத்த பாகுபலி படத்தில் மகேந்திர பாகுபலியின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் வெங்கடேச பிரசாத் (தாயாக ரோகினி நடித்தார்). இவர் தெலுங்கில் பெரிய நடிகர் இல்லை. சின்ன சின்ன கேரக்டர்களில் தான் நடித்து வந்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய நடிகர் ஆனார். தற்போது, பல படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வெங்கட பிரசாத் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாராம். சினிமா வாய்ப்பு தேடி வந்த அந்த பெண்ணை ஆசை காட்டி மயக்கி திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். 2 முறை அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைத்துள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அந்த பெண் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் வெங்கட் பிரசாத் மீது புகார் அளித்துள்ளார்.
அதோடு போதை மருந்து கும்பலுக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து வெங்கட பிரசாத்தை கைது செய்த போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெங்கட பிரசாத் கைது செய்யப்பட்டிருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.