போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சிறைத்தண்டனை அனுபவித்த சஞ்சய் தத் படங்களை மக்கள் பார்க்கிறார்கள் என்றால் திலீப்பின் படங்களையும் அவர்கள் பார்ப்பதில் என்ன சங்கடம் இருந்துவிட போகிறது... சஞ்சய் தத்துக்கு ஒரு நியாயம்.. திலீப்புக்கு ஒரு நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார் மலையாள இயக்குனரும் நடிகருமான 'ஷட்டர்' புகழ் ஜாய் மேத்யூ.
தற்போது நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மலையாள நடிகர் திலீப்பின் ராம்லீலா படம் வரும் செப்-28ல் ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்காதீர்கள் என ஒரு பிரிவினர் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் இப்படி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் ஜாய் மேத்யூ.
பொதுவாக ஒரு நட்சத்திரத்தின் சொந்த வாழ்க்கையின் சங்கட நிகழ்வுகள் அவர்களது படங்களை எந்தவிதத்தில் பாதிக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது.. பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான் விஷயத்திலும், சஞ்சய் தத் விஷயத்திலும் இதுபோன்ற கணிப்புகள் தவறாக போயுள்ளன. அவர்கள் தவறு செய்தார்கள் என்று கைது, வழக்கு விவகாரங்கள் நடந்தபின்னும் கூட அதன்பின் வெளியான அவர்களது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பவே செய்தன.
ஆனால் அந்த இருவரின் வழக்கு விஷயத்தில் இருந்து மாறுபட்டது மலையாள நடிகர் திலீப்பின் விவகாரம். நடிகை விவகாரத்தில் கைதாகி சமீபகாலமாக சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பின் படம் தற்போதைய சூழலில் ரிலீஸானால் அதற்கு மக்களிடம் எந்த விதமான வரவேற்பு இருக்கும் என்கிற கேள்வி பலரிடமும் இருக்கிறது..
அந்த ரீதியில் தான் இப்படி கேள்வி எழுப்பியுள்ள இயக்குனர் ஜாய் மேத்யூ, தான் எப்போதும் பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் ஆதரவாக நிற்பவன் தான் என்றும் ஒரு நல்ல படம், நடிகரை முன்னிறுத்தி பிரச்சனையில் சிக்குவதால் ஒரு அறிமுக இயக்குனரின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என்பதால் தான் இப்படி கேள்வி எழுப்பினேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதே ஜாய் மேத்யூ தான் திலீப் கைது செய்யப்பட்டபோது திலீப்புடன் பணியாற்றி இருக்கிறோம் என்பதை நினைக்கும்போதே அவமானமாக உணர்கிறேன்.. வெட்கப்படுகிறேன் என கூறியவர் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.