ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டி மீது ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. அதாவது அவர் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை.. ஒன்றிரண்டு படங்களை இயக்கியவர்கள் கூட மம்முட்டியின் படத்தை இயக்க வாய்ப்பு பெறுவது கஷ்டம் என்கிற ரீதியில் குற்றச்சாட்டுகள் நீண்டன. ஆனால் கடந்த பத்து வருடங்களில் மம்முட்டி அந்த கொள்கைகளை தளர்த்தி, பிரபலமான இயக்குனர்கள் தவிர்த்து அறிமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து வந்தார். கொடுத்தும் வருகிறார். ஆனால் அப்படிவாய்ப்பு கொடுத்த இயக்குனர்களின் படங்களில் 9௦ சதவீத படங்கள் மம்முட்டியை ஏமாற்றவே செய்தன.
இந்தநிலையில் முதல் படத்தில் வெற்றி வாகை சூடிய இயக்குனர்களுக்கு மம்முட்டி தற்போது சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க ஆரம்பித்துள்ளார். முதல் படத்தை வெற்றிப்படமாக்கிய இயக்குனர்கள் எந்த தடையுமில்லாமல் மம்முட்டியை சந்தித்து தாராளமாக கதை சொல்லலாம். மம்முட்டிக்கு கதை பிடித்துப்போனால் உடனே அந்த இடத்திலேயே அவர்களுக்கு சம்மதமும் சொல்லி விடுகிறார்.
அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலையாளத்தில் மல்யுத்தத்தை மையமாக வைத்து வெளியான 'கோதா' என்கிற படத்தின் இயக்குனர் பஷில் ஜோசப்புக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை சமீபத்தில் கொடுத்தார் மம்முட்டி.. கடந்த 2016 ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'அனுராக கரிக்கின் வெள்ளம்' பட அறிமுக இயக்குனர் காலித் ரஹ்மானுக்கும் தற்போது அவரது இரண்டாவது படமாக தனது படத்தை இயக்கும் வாய்ப்பை தந்துள்ளார்.
இதற்கு முன்பு பஹத் பாசில் நடித்த 'மகேஷிண்டே பிரதிகாரம் இயக்குனர் திலீஷ் போத்தனையும் அழைத்து அவரது இரண்டாவது படத்தை தன்னை வைத்து இயக்க சொன்னார்.. ஆனால் மீண்டும் பஹத் பாசிலை வைத்தே தனது இரண்டாவது படத்தை இயக்குவதாக வாக்களித்து இருந்த திலீஷ் போத்தன், அதை சமீபத்தில் நிறைவேற்றிவிட்டு, தனது மூன்றாவது படமாக மம்முட்டி படத்தை இயக்கவுள்ளார்.