ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப், கடந்த 2 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப் பலமுறை ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தும், அவருக்கு ஜாமின் தர கோர்ட் மறுத்து விட்டது.
தொடர்ந்து நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், திலீப் மற்றும் அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் தான் முக்கிய குற்றவாளிகள் என நிரூபிக்கும் வகையிலான சாட்சிகள், ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். இந்நிலையில், தனது தந்தையின் நினைவு தின சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் கேட்டு திலீப், சிறைத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தார்.
திலீப்பின் கோரிக்கையை ஏற்ற சிறை அதிகாரிகள் அவரை பரோலில் வெளியே விட அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து, இன்று (செப்.,6) 2 மணிநேரம் பரோலில், திலீப் சிறையில் இருந்து வெளியே வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் தந்தையின் நினைவுநாள் காரியங்களில் கலந்துகொண்ட திலீப், அதன்பின் காலை உணவையும் அங்கேயே முடித்தார். சரியாக 9.45 மணியளவில் மீண்டும் போலீஸ் காவலுடன் ஆலுவா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் திலீப்.. அவர் வந்து சென்ற இந்த இரண்டு மணி நேரத்தில் போன் பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த அனுமதியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் உயர் அதிகாரியின் ஆலோசனையின்படி நடக்கவேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. திலீப்பும் அதன்படியே நடந்துகொண்டார்.