போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
துவ்வாத ஜகன்னாதம் படத்தில் பிராமண சமையல்காரராக நடித்த அல்லு அர்ஜூன் அடுத்து நடிக்கும் படம் நா பேரு சூர்யா. ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. வம்சி இயக்கும் இந்த படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்க, சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
மேலும், ராணுவம் சம்பந்தப்பட்ட கதையில் தயாராகும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட உள்ளதாம். இதில் ராணுவ வீரராக அல்லு அர்ஜூன் நடிக்கிறாராம். இந்த படத்திற்காக தன்னை முழுமையாக தயார்படுத்தி வரும் அவர், தனது தலை முடியையும் மிலிட்டரி கட்டிங் செய்திருக்கிறாராம். ஆக்சன் கதையில் இந்த படம் தயாரானபோதும், ரொமான்ஸ் காட்சிகளுக்கும் ஓரளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாம்.