ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சிரஞ்சீவி தெலுங்கில் மறுபிரவேசம் செய்த படம் கைதி எண் 150. இப்படம் தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் ரிமேக் ஆகும். 2017 ஜனவரியில் இந்த படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து பல டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வந்த சிரஞ்சீவி, சுரேந்தர் என்ற இயக்குனர் சொன்ன கதை பிடித்துப் போக அதில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
மேலும், பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் ராயல் சீமாவை ஆண்ட அரசரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கதையில் இந்த படம் தயாராகிறது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய இந்தியர்களில் இவரும் ஒருவராம். அதனால் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற அவர் பெயரிலேயே இந்த படம் தயாராகிறது. இந்த படத்தை சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சுதந்திர போராட்ட வீரரின் கதை என்பதால், வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றே அப்படத்தை தொடங்க இப்போது முடிவு செய்துள்ளனர்.
சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண்தேஜா தனது கோனிடெலா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் ஐஸ்வர்யா ராய், நயன்தாரா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.