போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கடந்த இரண்டு வருடங்களில் நிவின்பாலி நடித்த படங்களில் எல்லாம் புதுமுகங்கள் தான் ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள். ஆனால் அந்த அடிப்படையில் தான் தற்போது நிவின்பாலியை கதாநாயகனாக வைத்து 'மூத்தோன்' என்கிற படத்தை இயக்கிவரும் கீது மோகன்தாஸும் தனது படத்தில் சோபியா துலிபியா என்கிற ஒரு வட இந்திய நடிகையை அறிமுகப்படுத்தி இருக்கிறாரா என்றால் நிச்சயமாக இல்லை என மறுக்கிறார் கீது மோகன்தாஸ்.. அப்படி பார்த்தாலும் கூட இந்த சோபியா, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான 'ராமன் ராகவ் 2.0' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர்..
“இந்தக்கதை சிறுவயதிலேயே காணாமல் போன தனது அண்ணனை தேடி மும்பை வரும் தம்பியின் கதை.. படம் முழுவதும் கிட்டத்தட்ட பயணத்திலும் தேடலிலுமே இருக்கும். அதனால் நிவின்பாலிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்களோ அல்லது படத்தில் உடன் நடிக்க முன்னணி நட்சத்திரங்களோ தேவைப்படவில்லை” என்கிறார் கீது மோகன்தாஸ். இன்னொரு முக்கியமான விஷயம் 'மூத்தோன்' படத்திற்கு மும்பையில் நடக்கும் காட்சிகளுக்கு இந்தியில் வசனம் எழுதியிருப்பதும் அனுராக் காஷ்யப் தான்.. இப்போது புரிகிறதா இந்தப்படத்திற்குள் சோபியா ஹீரோயினாக வந்த விதம்..!