நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
நேரம் படத்தின் ஐந்தாம் வருட கொண்டாட்டத்தின் குஷி மூடில் இருக்கிறார் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதுசரி, நேரம், பிரேமம் என இரண்டு ஹிட் படங்களின் வெற்றியை பார்த்துக்கொண்டே, ரசித்துக்கொண்டே மட்டும் இருந்துவிட்டால் போதுமா..? அவரது அடுத்த படம் என்ன என்கிற கேள்விக்கு தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் படம் என்பது மட்டும் தான் இப்போது வரையிலான பதிலாக இருக்கிறது. இந்நிலையில் முகநூலில் தனது தெலுங்கு படம் குறித்த செய்தி ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
தெலுங்கு ரசிகர் ஒருவர் எப்போது தெலுங்கில் படம் இயக்குவீர்கள் என கேட்க, தெலுங்கு ஸ்கிரிப்ட் ஒன்று கைவசம் இருப்பதாகவும் ஆனால் அது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றும் கூறியுள்ளார் அல்போன்ஸ். மேலும் அந்த இரண்டு ஹீரோக்களில் ஒருவராக பிரபாஸ் அல்லது அல்லு அர்ஜூன் இருவரில் யாரோ ஒருவர் நடித்தால் கூட ஒகே தானாம். ஆனால், மற்றொரு ஹீரோ சாய்ஸ் ஆக இருப்பவர் அவரது மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகரான பிரம்மானந்தம் தானாம். பிரம்மானந்தம் ஒப்புக்கொண்டால் மட்டுமே தெலுங்கில் அந்தப்படத்தை இயக்குவாராம் அல்போன்ஸ் புத்ரன்.